Home அரசியல் 6 பேரின் உயிரை குடித்த சிங்கம்புணரி குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

6 பேரின் உயிரை குடித்த சிங்கம்புணரி குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

0

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மே 20 காலை 9:25 மணிக்கு மேகா புளூ மெட்டல்ஸ் குவாரியில் பாறை சரிந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஊழியர்கள் மணல் எடுக்கும் இயந்திரம் மூலம் குழி தோண்டிய போது பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. பலியானவர்கள் சம்பவத்திடத்தில் அல்லது மருத்துவமனையில் இறந்தனர்.

போலீசார் குவாரி உரிமையாளர் மேகவர்ணம், அவரது தம்பி கமலதாசன், பொறுப்பாளர் கலையரசன் மற்றும் சூப்பர்வைசர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து, கமலதாசன், கலையரசன், ராஜ்குமாரை கைது செய்தனர். மேகவர்ணம் தற்போது தேடப்படுகிறார்.

கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவின்படி விசாரணை நடத்தப்பட்டதில், 1.50 எக்டேருக்கு அனுமதி பெற்ற மேகா புளூ மெட்டல்ஸ் நிறுவனம் 3.60 எக்டேரில் குவாரி செய்து, காலாவதியான லைசென்சுடன் கற்களை எடுத்துக் கொண்டு அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் காலாவதியான 2 குவாரிகளின் லைசென்சையும் ரத்து செய்யப்பட்டது.

மேகவர்ணத்துக்கு ரூ.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டு, 30 நாட்களில் அரசு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபராத உத்தரவு மேகா புளூ மெட்டல்ஸ் அலுவலகத்தில் வருவாய்துறை அதிகாரிகள் ஒட்டி வைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version